Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

Padine kumar(பாடினி)

 


பொதுவான பேச்சி, எதையாவது பேச வேண்டுமே என்றாக கூட இருக்கலாம். இன்றைய காலம் எவ்வளவோ மாறிவிட்டது. நாம் படித்த படிப்பு சார்ந்த வேலையை தான் செய்ய வேண்டுமென்றும் என்ற கட்டாயம் இல்லை.

நமக்கு எந்த வேலை பிடித்திருக்கிறதோ அதனை தாராளமாக செய்ய சுகந்திரம் இருக்கிறது. முன்பு காலங்களில் படித்த வேலை கிடைக்க வில்லை என்றால் கிடைத்த வேலையை படித்துக் கொள், அப்படியே பிழைத்துக் கொள் என்பார்கள். 

இல்லையென்றால் மாடுதான் மேய்க்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் மாறிவரும் காலம் ஒரு வேலை செய்பவர்களையும் கற்றலில் ஆர்வம் குறைந்து அவர்களை பிரபலம் ஆக செய்கிறது.

பின்னொரு நாளில் பணம் மட்டுமே அத்தியாவசியம் என்ற பணத் தேவையை நோக்கி நகரச் செய்கிறது. 

அப்படியே மாடல் அழகிகள் சினிமாவிற்கு தேர்வானா காலங்கள் கடந்து இன்று யார் வேண்டுமானாலும் நாயகிகள் ஆகலாம், அல்லது நாயகன் ஆகலாம் என்ற தீர்க்கத் தனமான நம்பிக்கையை இணையம் செய்து வருகிறது.

பல மருத்துவ பெண்கள் நடிகைகளாக வலம் வருவதை பார்க்க முடிகிறது. சாய் பல்லவி தொடங்கி இன்று சமூக சோஷியல் மீடியா நடிகைகள் வரை பலர் டாக்டர். 

பிறகு ஏன் இந்த நடிப்பு ? இன்றைய தலைமுறைகள் தொழில் என்று ஒன்று மற்றுமொன்று பேஷன் என்று இரண்டு வகையாக வேலையை பிரிக்கிறார்கள்.

படித்த வேலையை செய்வது தொழில் வருமானத்திற்காக அப்படியே பிடித்த ஒன்றை செய்வது மன திருப்திக்ககா பல ஆண்கள் இயக்குனர் அல்லது போட்டோ கிராபர் கேமரா மேன் கனவுகள் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது. 

ஏதாவது ஒன்றை சிறப்பாக செய்தால் போதும் என்ற நிலை மாறிவிட்டது. நமக்கு எல்லாம் பிடித்தது என்றால் விளையாட்டு தான் தொழில் என்றால் வேலை மற்றைய நேரங்கள் முழுவதும் விளையாட்டு தான்.

இன்று கல்லூரி அல்லது பள்ளி படிக்கும் இளைஞர்கள் இணையம் வழி சம்பாதிக்கிறார்கள். போகிற நிலையில் உணவை யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது கவலையாக உள்ளது.

உணவை விட்டுத் தள்ளுங்கள் பஞ்சம் பசி பார்த்த சனம் என்று பாடினால் போதும், வார்த்தைகளுக்கு வசப்படும் மனிதர்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள்.

ஆனது ஆகட்டும், மருத்துவம் படித்து விட்டு இருக்கும் நோய்களுக்கு நான்கு மருந்துகளை மனப்பாடம் செய்து படித்து விட்டு வரும் நோயாளிகளுக்கு அவற்றைக் கொடுத்து நானும் டாக்டர் என்று மார் தட்டிக் கொள்வதில் என்ன பெருமை.

ஒன்று மருத்துவராக பணியாற்றி வரும் நோயாளிகளை நன்கு ஆராய்ந்து நோய்க்கு மூலம் என்ன என்பதை அறிந்து தகுந்த மருந்து கொடுக்க வேண்டும். சில நோய்கள் அவர்கள் இருப்பிட சுற்றுச் சூழல் கூட காரணமாக இருக்கலாம்.

நோய்களின் வெளித் தோற்றம் கண்டு மருந்துகள் கொடுத்து விட்டு. முழு நேர நடிகர், நடிகைகளாக வலம் வராதீர்கள். 

ஒன்று மருத்துவத்தை முழுமையாக பாருங்கள் இல்லை என்றால், நடிகையாக முழு நேரத்தை எடுத்துக் கொண்டு சிறந்த நடிகைகளாக மாறுங்கள்.

மக்கள் வாழ்வை மேம்படுத்த மருத்துவம் படித்த உங்களால் முடியவில்லை என்றால் படித்த படிப்பு என்பது நிச்சயம் பயனற்றது தான்.

மருத்துவ துறை அதி நவீன வளர்ச்சிப் பெற்று மூளையில் நியூரோ சிப் பொருத்தும் அளவு வளர்ந்துள்ளது. நாமும் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மருத்துவத்திலே அதிக வருமானம் இருந்தும் அனைவருக்கும் இன்றைய காலத்தில் அனைவரும் பிரபலம் ஆக வேண்டும் என்று தங்களை வருத்திக் கொள்கிறார்கள்.

உணவை குறைத்துக் கொண்டு முழு நேர உடற்ப்பயிற்சி செய்து மாரடைப்பு ஏற்படும் அளவு அனைவரும் வரம்புகளை மீறி உயிரை விடத் தயாரா உள்ளது இன்றைய இணைய, இளைய தலைமுறை. 





Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...